April 04, 2012

இன்னும் சில நாட்களில் ....

தனியாய்ப் போ என் சபிக்கப்பட்ட
என் கவிதைகளுக்கு விமோசனங்கள்
இன்னும் சில நாட்களில்

பாலைவனத்தில் முளைத்திருந்த
என் பாதைகளுக்கு வசந்த காலம்
இன்னும் சில நாட்களில்

என் பூந்தோட்டத்தில் பிறந்த
என் மொட்டுகளுக்கு மலரும் காலம்
இன்னும் சில நாட்களில்

முப்பது தேய்பிறையில் வாடிய
என் நிலவுக்கு வளர்பிறைகள்
இன்னும் சில நாட்களில்

நாத்திக மத குரு எனக்கு
காதல் தெய்வத்திடம் தினம் ஒரு வரம்
இன்னும் சில நாட்களில்

எனது பரம்பரையில்
முதல் குயிலின், முதல் பாடல்
இன்னும் சில நாட்களில்

எனது முன்ஜென்ம தவங்களுக்கு
ஒட்டுமொத்தமாய் வரங்கள்,
இன்னும் சில நாட்களில்

என் ஏக்கங்களும், உன் மௌனங்களும்
சுக்குநூறாய் உடையப்போகின்றன,
இன்னும் சில நாட்களில்

உன் இதழெங்கும் முத்தங்கள்
என்னில் எங்கும் உன் இதழ் ரேகைகள்
இன்னும் சில நாட்களில்

உன் வெட்கங்களில்
என் ரசனைகள் வரையும் ஓவியங்கள்
இன்னும் சில நாட்களில்

இன்னும் சில நாட்களில் எனும் என் இரவு
இன்னும் சில கணங்களில் எனும் விடிவாய்
இன்னும் சில நாட்களில்

ஆகமொத்தத்தில் வரப்போகிறாள்
என் கவிதைகளுக்கெல்லாம் சொந்தக்காரி,
இன்னும் சில நாட்களில்

4 comments:

  1. How many more days to go Moor???
    Are those butterflies still alive :p

    ReplyDelete
  2. How many days-a? Athuthan ellam poyiduche !!!!

    ReplyDelete
  3. arasiyalla ithellam sagajam pa! there is more and more to come! :)

    ReplyDelete
  4. too much fun in the last 1 month.... :-)

    ReplyDelete