January 19, 2013

நாவில் இனிப்பில்லை
உன் பெயரைச் சொல்லிக் கொள்கிறேன்,
இதழ்களில் இனிப்பில்லை
என்ன செய்வதடி !!!

January 17, 2013

கடந்த நொடியை விட
இன்னும் இனிக்கிறது இந்த நொடி,
இன்னொரு முறை சொல்லேனடி என் பெயரை
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
என் இரவெங்கும் இனிப்பின் வாசனை,
உளறிக் கொண்டிருக்கிறேன் உன் பெயரை
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
காதல் எனும் தவங்கள், நீ எனும் வரம்
நீ எனும் தவம், காதல் எனும் வரங்கள்
- என் கவிதைகளும், ஒரு பெண் கவிதையும்
முன் இரவு: நீ ஓவியம், உன் புடவை வர்ணம்
பின் இரவு: நீ ஓவியம், நான் வர்ணம்
- ஒரு முனையில் நீ, மறு முனையில் நான்
உன் புடவைத் தலைப்பு எனும்
பல்லவி மட்டும் கொடு,
சரணங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்
- ஒரு முனையில் நீ, மறு முனையில் நான்

January 15, 2013

வரைந்த ஒரு சித்திரம் நீ,
நெய்த ஒரு சித்திரம் உன் புடவை
இரு சித்திரங்கள், ஒரு ஓவியன்
- ஒரு முனையில் நீ, மறு முனையில் நான்

January 14, 2013

நீயா? உன் புடவையா?
யார் வாசம் முதலில்?
யார் வசம் முதலில்?
- ஒரு முனையில் நீ, மறு முனையில் நான்

January 06, 2013

நீ வெட்கம் மட்டும் படு,
உனக்கும் சேர்த்து நான் சிவந்து கொள்கிறேன்
உனக்கு வெட்கப்படத் தெரியும்,
எனக்கு வெட்கப்பட வைக்கத் தெரியும்..
பாவம் வெட்கம், நமக்கிடையே பரிதாபமாய்