September 14, 2022

உன் பிரிவு எனும் கொடும் தண்டனை …

இன்னும் எத்தனை இரவுகள்

என் தலையணை யுத்தங்கள் முடிந்து போக ?


இன்னும் எத்தனை விரல் நகங்கள்

நான் துண்டாக்கி சிதைக்க?


இன்னும் எத்தனை நீண்ட நிமிடங்கள்

நான் வெறுத்து சுவாசிக்க?


இன்னும் எத்தனை பதிலில்லா கேள்விகள் 

நான் முடியாமல் சுமக்க?


இன்னும் எத்தனை வறண்ட நாட்கள் 

நான் வானவில் காண்பதற்கு?


இன்னும் எத்தனை வளர்பிறை நாட்கள்

இங்கே முழுமதி காண்பதற்கு?


இன்னும் எத்தனை தொலைபேசி அழைப்புகள்

உன் குரல் கேட்பதற்கு?


இன்னும் எத்தனை மௌனங்கள்

என் முதல் கவிதை அரங்கேற்ற?


இன்னும் எத்தனை கனவுகள்

நீயும் நானும் நனவாக?


இன்னும் எத்தனை பூகம்பங்கள்

என் முதல் மொட்டு மலர்வதற்கு ?


இன்னும் எத்தனை யுகங்கள்

நீ ஒளிந்து இருக்க?


தனிமையிடம் நான் சரணடைந்து விட்டேன்.

என்னிடம் இழக்க வேறொன்றுமில்லை

ஒரு கணமும் தாமதிக்காமல், அருகில் வா.


உன் பிரிவு என்பது ஒரு மிகப்பெரும் கொடும் தண்டனை 


No comments:

Post a Comment