நீ காதலியாக இருக்கும் போது உன்னில் மனைவியையும் நீ மனைவியாக இருக்கும் போது உன்னில் காதலியையும் தேட வைத்திருக்கிறது இந்த பொல்லாக் காதல்
இருக்கும் விண்மீன்களைக்கூட அறிவியல் எண்ணிச் சொல்கிறது, ஆனால் உன் வெட்கங்களின் வகைகளை அறிந்து கொள்ள அறிவியலில் ஏதேனும் வழி உண்டோ?
June 27, 2011
முந்தின நாள் இரவில் மிச்சம் வைத்த வெட்கங்களை காலையில் கண்ணாடி முன் கொட்டிப்போகும் நீயும், இரண்டு வெட்கங்களுக்கு நடுவில் ஊஞ்சலாடும் நானும் இருக்கும் இடத்திற்கு பேர் சொர்க்கம் இல்லாமல் வேறென்ன?
உன் வெட்கப் பல்கலைக்கழகத்தில் வாரா வாரம் புதிய பாடத்திட்டங்கள் சேர்க்கும் உனக்கு, நான் இன்னும் முதல் வகுப்பே தாண்டவில்லை என்பது நினைவில்லையோ?
June 25, 2011
உன் வீட்டிற்கும் என் வீட்டிற்கும் இருக்கும் தொலைவை விட, என் அருகே அமர்ந்திருக்கும் உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி பெரிதாய்த் தெரிகிறதடி எனக்கு
June 23, 2011
இந்நாள் வரை தேநீரில் நான் சர்க்கரை கலந்ததில்லை, உன் பெயரை சொல்லிக்கொண்டு பருகும்போது சுவை குறைந்த சர்க்கரை எனக்கெதற்கு?
உன்னுடைய புதிய புகைப்படம் ஒன்றை அனுப்பிவையேன், அடுத்த கவிதைக்கு கரு தேடி களைத்துப் போய்விட்டேன்
அகதியைப் போல் அலைகின்றன உன் மண்ணில் என் சொற்கள், உன் மனமெனும் முகாமில் சிறிது இடம் கொடேனடி
June 22, 2011
நம்முடைய அடுத்த பட்டிமன்றத் தலைப்பு: நாம் சந்தித்த முதல் நிமிஷம் உன்னோடு இருக்கும் இந்த நிமிஷம் இரண்டில் எது பொக்கிஷம்?
என் கவிதையின் வார்த்தைகள் வர்ணம் இழந்து போகின்றன நீ விமர்சனம் செய்யாவிட்டால்
June 20, 2011
என் நிச்சயதார்த்த மோதிரத்திற்கும் உன் மாங்கல்ய நூலுக்கும் இடையே ஏன் இத்தனை தேவையில்லாத நிமிடங்கள்?
June 16, 2011
தேநீர் தயாரிக்க பதினைந்து நிமிடம் செலவாகுமென்று இலவசமாய் முத்தங்களை தந்துபோகும் ஒரு அழகான சோம்பேறி நீ
June 14, 2011
உன் முத்தங்களை பன்மடங்காக்குவதில் மிக மிக சந்தோசங்கள், உன் வெட்கங்களை சேமிக்கத் தவறுவதில் மிக மிக வருத்தங்கள்
எழுத்தாணி காலம் தொடங்கி, கணினிக் காலம் வரை நீயும் மௌனமாய்த்தான் இருக்கிறாய், நானும் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறேன்
எப்போது கடக்கும் என் கரையை உன் மௌனம் எனும் புயல்? உன் மனநிலை அறிக்கையில் எனக்கு ஏதும் புலப்படவில்லை.
June 13, 2011
உன் சிவப்பு உதட்டுச்சாயம் என் கன்னங்களில் ஒட்டிக்கொண்டாலும் வெட்கத்தில் சிவந்து போவதென்னவோ நீதான்
பிள்ளையார் சுழியில் ஆரம்பிக்கும் மடல்கள் போலே, உன் உதட்டுச் சுழியில் ஆரம்பிக்கின்றன என் காவியங்கள்
June 09, 2011
பாற்க்கடலைக் கடைந்து கிடைக்கும் அமுதம் யாருக்கு வேண்டும்? நம் தோழியின் திருமண பந்தியில் நீ கைகளை உதறியபோது என் மீது தூறலாய் விழுந்த அந்த இரு நீர்த்துளிகள் மட்டும் போதும்
நாம் சந்தித்த நாளில் திருமணமான நம் வகுப்புத்தோழி கூட இடுப்பில் ஒன்றும், வயிற்றில் ஒன்றுமாய் ஒய்யாரமாய் வலம் வருகிறாள், உனக்கு மட்டும் ஏன் மனதில் ஒன்றும் தோன்ற மறுக்கிறது?
June 02, 2011
உணவு விருந்துகள் இனிப்பிலிருந்து ஆரம்பிப்பது போல, என் காலைப் பொழுதுகள் உன்னிலிருந்து ஆரம்பிக்கின்றன
இதோடு நாற்பத்து மூன்று முறை உன்னை மறந்தாகிவிட்டது, என் ஒவ்வொரு முறை சபதத்தையும் துகள்துகளாய் உடைத்துப்போகிறது உன் தொலைபேசி அழைப்பு
June 01, 2011
எதிர்பார்த்தது வீண் போகவில்லை சாயந்தரம் வீசிய மழையில் நனைந்தாயிற்று. சில மணி நேர சத்தங்களும் சில நிமிட முத்தங்களும் நிச்சயம்