June 10, 2012

கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை


கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறேன்,
விதைத்த கவிதை விதைகள்
எல்லாம் மலர்களாய் மலர்ந்து இருக்கின்றன
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

நிலவு உதிப்பதில் நான் விடிகின்றேன்
கதிரவன் உதிப்பதில் நான் இரவாகிறேன் ,
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

மலர்கள் பறித்த பின்
செடி அழும் குரல் கேட்கிறது,
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

ஆயிரம் ஒத்திகைக்குப் பின்
உன் மேடையில் என் முதல் காதல் கடிதத்தின் அரங்கேற்றம்
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

உனக்கான முத்தங்களை சேகரிக்க ஆரம்பித்துவிட்டேன்,
எண்ணிக்கை வேண்டுமா?
விண்மீன்களை எண்ணிப் பார்த்துக் கொள்
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

உன் புடவையின் வண்ணங்களுக்கு
ஏங்குகிறது என் வானின் வானவில்,
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

சந்தித்த முதல் நாளிலேயே உனக்கும் எனக்கும் சண்டை,
என் முத்தமா, உன் வெட்கமா?
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

ஒரு முனையில் நீ, மறுமுனையில் நான்
இணைக்கும் பலமாய் நடுவே கெட்டிமேள நாள்,
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

உன்னோடு இருக்கும் நொடிகளை நீளச் சொல்கிறேன்
நீ இல்லாத நாட்களை இறக்கச் சொல்கிறேன்
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

நீ இதழ் திறந்து சம்மதம் சொல்.
நான் இதழ் மூடி சம்மதம் சொல்கிறேன்
கடைசியாய், காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை

No comments:

Post a Comment