இன்னும் மழை நின்று போகவில்லை...
மேகம் வைத்திருந்த கடைசித்துளிகளை, பூமிக்கு தாரை வார்த்துக் கொண்டிருந்த ஒரு மாலை நேரம்...
வீட்டின் முற்றத்தில் மழையை ரசித்துக் கொண்டிருந்த என்னை, ஒரு மழைத்துளி மெதுவாய் புரட்டிப் போட்டது...
சில ஆண்டுகளுக்கு முன், இதேபோல் மழை கொட்டிக் கொண்டிருந்த ஒரு மாலை நேரம்..
மனதெங்கும் ஒரு திருவிழா நடந்து கொண்டிருந்த நேரமும் கூட...
பல மாதங்கள் நான் வேண்டிய கடவுள், இன்று கண்களோடு மேகங்களையும் திறந்திருந்தார்...
ஒற்றைக் குடையில், முதன் முதலாய் நீயும் நானும்...
விழும் மழைத் துளிகளும், மிரட்டும் இடிகளும் உன்னை என்னோடு இன்னும் நெருக்கி வைத்திருந்தன..
ஊரே மழையை சபித்துக் கொண்டிருக்க, நான் மட்டும் வாழ்த்திக் கொண்டிருந்தேன்....
இன்னும் கொஞ்சம் நீளட்டும் இந்த மழை, இன்னும் கொஞ்சம் நெருங்கட்டும் என் தேவதை...
உன் உதட்டைக் குறிவைத்து, சில மேகங்கள் மோக அம்புகளை வீசிக் கொண்டிருந்தன...
விழுந்த துளிகள் எல்லாம் அமிர்தத் துளிகளாய் மோட்சம் அடைந்து போயின
விழும் துளிகள் உன் அழகைக் கரைக்க முயல, நானோ கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தேன்...
இன்னும் கொஞ்சம் பெரிதாகட்டும் இந்த மேகம், இன்னும் கொஞ்சம் சிறிதாகட்டும் இந்தக் குடை
எழு நிற வானவில் ஒரு பக்கம், சிவப்பு நிற வானவில் என் பக்கம்
நீ அழகு, மழை அழகு... மழையில் நீயும் அழகு.. உன்னில் மழையும் அழகு...
மின்னல்களும் என்னோடு சேர்ந்து கொள்ள, மனதெங்கும் கொண்டாட்டம்தான்
இன்னும் கொஞ்சம் நீளட்டும் இந்தப் பயணம், இன்னும் கொஞ்சம் தித்திக்கட்டும் இந்த நிமிடம்
நம் கைரேகைகள் என்ன பேசிக்கொள்கின்றன?
ஒட்டுக் கேட்க நினைக்கும் துளிக்கு, வழக்கம் போல இடம் இல்லை
உன் மேல் விழுந்து என் மேல் விழும் துளிகள், மின்சாரத்தை பாய்ச்சிக் கொண்டிருந்தன
இன்னும் கொஞ்சம் காதலாகட்டும் இந்தத் தருணம், இன்னும் கொஞ்சம் மலரட்டும் உன் வெட்க மொட்டுக்கள்
அடுத்த விழுந்த மழைத்துளி,
என்னை மெதுவாய் தட்டி எழுப்புகிறது...
இங்கேயும், அங்கேயும் ஒரே மேகம்
இங்கே ஒரு துளி, என் மீது விழுகிறது
அங்கே ஒரு துளி, உன் மீது விழுகிறது
ஞாபகப்படுத்தட்டும், நம் மீது விழுந்த மழைத்துளியை
விழட்டும் என் மீது இன்னொரு துளி
தொடங்கட்டும் நம்மில் திருவிழாக்கள் ....
மேகம் வைத்திருந்த கடைசித்துளிகளை, பூமிக்கு தாரை வார்த்துக் கொண்டிருந்த ஒரு மாலை நேரம்...
வீட்டின் முற்றத்தில் மழையை ரசித்துக் கொண்டிருந்த என்னை, ஒரு மழைத்துளி மெதுவாய் புரட்டிப் போட்டது...
சில ஆண்டுகளுக்கு முன், இதேபோல் மழை கொட்டிக் கொண்டிருந்த ஒரு மாலை நேரம்..
மனதெங்கும் ஒரு திருவிழா நடந்து கொண்டிருந்த நேரமும் கூட...
பல மாதங்கள் நான் வேண்டிய கடவுள், இன்று கண்களோடு மேகங்களையும் திறந்திருந்தார்...
ஒற்றைக் குடையில், முதன் முதலாய் நீயும் நானும்...
விழும் மழைத் துளிகளும், மிரட்டும் இடிகளும் உன்னை என்னோடு இன்னும் நெருக்கி வைத்திருந்தன..
ஊரே மழையை சபித்துக் கொண்டிருக்க, நான் மட்டும் வாழ்த்திக் கொண்டிருந்தேன்....
இன்னும் கொஞ்சம் நீளட்டும் இந்த மழை, இன்னும் கொஞ்சம் நெருங்கட்டும் என் தேவதை...
உன் உதட்டைக் குறிவைத்து, சில மேகங்கள் மோக அம்புகளை வீசிக் கொண்டிருந்தன...
விழுந்த துளிகள் எல்லாம் அமிர்தத் துளிகளாய் மோட்சம் அடைந்து போயின
விழும் துளிகள் உன் அழகைக் கரைக்க முயல, நானோ கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தேன்...
இன்னும் கொஞ்சம் பெரிதாகட்டும் இந்த மேகம், இன்னும் கொஞ்சம் சிறிதாகட்டும் இந்தக் குடை
எழு நிற வானவில் ஒரு பக்கம், சிவப்பு நிற வானவில் என் பக்கம்
நீ அழகு, மழை அழகு... மழையில் நீயும் அழகு.. உன்னில் மழையும் அழகு...
மின்னல்களும் என்னோடு சேர்ந்து கொள்ள, மனதெங்கும் கொண்டாட்டம்தான்
இன்னும் கொஞ்சம் நீளட்டும் இந்தப் பயணம், இன்னும் கொஞ்சம் தித்திக்கட்டும் இந்த நிமிடம்
நம் கைரேகைகள் என்ன பேசிக்கொள்கின்றன?
ஒட்டுக் கேட்க நினைக்கும் துளிக்கு, வழக்கம் போல இடம் இல்லை
உன் மேல் விழுந்து என் மேல் விழும் துளிகள், மின்சாரத்தை பாய்ச்சிக் கொண்டிருந்தன
இன்னும் கொஞ்சம் காதலாகட்டும் இந்தத் தருணம், இன்னும் கொஞ்சம் மலரட்டும் உன் வெட்க மொட்டுக்கள்
அடுத்த விழுந்த மழைத்துளி,
என்னை மெதுவாய் தட்டி எழுப்புகிறது...
இங்கேயும், அங்கேயும் ஒரே மேகம்
இங்கே ஒரு துளி, என் மீது விழுகிறது
அங்கே ஒரு துளி, உன் மீது விழுகிறது
ஞாபகப்படுத்தட்டும், நம் மீது விழுந்த மழைத்துளியை
விழட்டும் என் மீது இன்னொரு துளி
தொடங்கட்டும் நம்மில் திருவிழாக்கள் ....