December 03, 2012

நான் தேடிய முதல் நாள் ...

நாவில் சொற்கள் போராட்டம் செய்கின்றன...
என் பேனாவில் எழுத்துக்கள் வன்முறையில் ஈடுபடுகின்றன
இருந்த விரல் நகங்கள் எல்லாம் துண்டிடப்பட்டிருந்தன...
இதயத்தில் ஒரு போர்க்களம் ஆரம்பித்திருந்தது....

சில நிமிடங்களிலேயே என் வெற்று வானம், அடை மழைக்குத் தயாரானது
சில நிமிடங்களிலேயே என் வெற்றுக் கிரகம், காதல் ஈர்ப்பு விசைக்குத் தயாரானது
சில நிமிடங்களிலேயே என் வெற்று எழுத்துக்கள், இலக்கியம் படைக்கத் தயாரானது
சில நிமிடங்களிலேயே என் வெற்று இதயம், அவளுக்குக்காக துடிக்கத் தயாரானது

என்ன நடக்கிறது எனக்குள்?
என்ன நடக்கிறது இங்கே?
என்ன  நடக்கிறது என் செல்களில்?
என்ன நடக்கிறது என் வினாடிகளில்?

இன்னும் ஓரடி நெருங்கி வராதே....
எரிந்து போக என்னிடம் மீதம் ஏதுமில்லை
இன்னும் ஓரடி விலகிப் போகதே
இறந்து போக என்னிடம் மீதம் ஏதுமில்லை

யாராவது தைரியம் கொடுங்களேன்,
என் காதலை அவளிடம் சொல்ல
யாராவது சொற்கள் கொடுங்களேன்
என் காதலை அவளிடம் படைக்க

யாராவது வர்ணங்கள் கொடுங்களேன்
என் காதலை அவளிடம் வரைய
யாராவது எனைத் தேடிக் கொடுங்களேன்
என்னை அவளிடம் சேர்க்க...

ஆண்மகன் நான் தைரியம் தேடுகின்றேன்
அரசன் நான் காவலுக்கு ஆட்கள் தேடுகின்றேன்
பிரம்மன் நான் துணைக்கு படைப்புகள் தேடுகின்றேன்
இறைவன் நான் வரத்திற்கு பக்தன் தேடுகின்றேன்

இந்த மணி - இந்த மௌனம்
இந்த நேரம் - இந்த நடுக்கம்
இந்த விநாடி - இந்த குதூகலம்
இந்த நாள் - நான் தேடிய முதல் நாள்

No comments:

Post a Comment