ஒரு முழுமையடைந்த ஓவியம், ஒரு முழுமையடைந்த கவிதை அவளின் இந்த முகம்
விழிகளில் ஒரு மொழி
இதழ்களில் ஒரு மொழி
எப்போதும் தடுமாறுபவன் நான்
இதழ்களைச் சுழித்து
இமைகளை உயர்த்தி
எனை நொறுங்கச் செய்பவள்
அவள் உதிர்க்கும் வார்த்தைகள்
காற்றிலேயே கரைந்து போகும்.
பிறகெப்படி நான் கேட்பது?
அவளின் இதழ் ரேகைகளெங்கும்
என் ஏக்கங்கள்
எனும் சோகக் கதைகள்
விழிகளின் மெய் மறைக்கும் இதழ்கள்
இதழ்களின் மெய் மறைக்கும் விழிகள்
இவள் ஒரு மாபெரும் வித்தைக்காரி
புகைப்படத்தில், அவள் அழகி
நேரில், அவள் ஒரு பேரழகி
அழகினால் மிரட்டுபவள் அவள்
அவள் முகம் போதும்
இந்த ஆயுள் முழுதும்.
வேறு எதுவும் தேவையில்லை எனக்கு
அழகைக் அடிக்கடி கூட்டாதே,
எனக்கிருப்பது ஒரு இருதயம் தான்
இன்னும் எத்தனை தாங்குவது?
இப்படிக்கு ,
உனைக் காதலிப்பதற்காகவே படைக்கப்பட்ட நான்
No comments:
Post a Comment