கிட்டத்தட்ட 50 மாதங்கள்....
தபூ.சங்கரின் கவிதைகளில் ஆரம்பித்த இந்த(க் காதல்) பயணம், இப்போது 1000 எனும் ஒரு இடத்தை மிக மன நிறைவாய் கடந்து செல்கிறது...
காதல் பெண்ணொருத்திக்கு
நான் கவிதை வாசிக்க கற்றுக் கொடுத்தேன்...
அவள் எனக்கு கவிதை எழுதக் கற்றுக் கொடுத்தாள்..
காதல் கவிதையானது...
பின் வந்த நாள்களில் கவிதைகளே காதலானது...
என் மின்னஞ்சல் பதிவுகளை பத்திரமாய் பாதுகாத்த என் தோழி ஒருத்தி, நிறைய எழுதச் சொல்லி 'என் நீயும் உன் நானும்' எனும் தொகுப்பிற்கு பிள்ளையார் சுழி போட்டாள் ...முகநூல் நண்பர்கள் இன்னும் நிறைய எழுத வைத்தார்கள்...
மிக்க மகிழ்ச்சியான இந்த தருணத்தை தோழர்கள் / தோழிகள் உடன் சேர்ந்து பங்கிட்டுக் கொள்கிறேன்...
இதோ என்னுடைய 1000 வது காதல் ஓவியம்....
நம் அழகுக் காதலின்
அழகு வினாடிகள் எனும் புள்ளிகளை இணைத்து
இங்கே வரையப்படுகிறது ஒரு பூக்கோலம்,
என் நீயும் உன் நானும், இனி நீ நம் நாமாய்
இதோ கேட்கிறது 'கெட்டி மேளம், கெட்டி மேளம்'