April 28, 2011

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில்
முதற்பரிசு வாங்கிய எனக்கு,
உனக்காக எழுதும் மடலுக்கு
ஏனோ வார்த்தைகள் தட்டுப்பாடு
தங்கத்தை உருக்கி
மாங்கல்யங்கள் செய்யும் நான்,
நம் மாங்கல்யத்திர்க்காக
உன்னிடம் இன்னமும்
உருகிக்கொண்டுதான் இருக்கின்றேன்

April 25, 2011

முன்பெல்லாம் நீ பேசும் வார்த்தைகள்
பாடலாய் என் செவிகளில் இசைந்து போகும்,
இப்போதெல்லாம் உன் வார்த்தைகள்
மணமேடை மந்திரங்களாய்த்தான் ஒலிக்கின்றன

April 20, 2011

எனக்குப் பெரிதாய் பரிச்சயமில்லாத உன்னை
என் உடம்பின் ஒவ்வொரு செல்லுக்கும்
பரிச்சயமாக்கி இருக்கிறது இந்தக் காதல்
என் வீட்டுக் குங்குமச்சிமிழுக்கும்
என் விரல்களுக்கும்
சாப விமோச்சனம் தர
எப்போது வரப்போகிறாய்?

April 19, 2011

நானில்லா இரவுகளில்
உன் தலையணையில்,
என் பெயரை வரைந்து போகின்றன
உன் அழகிய உதடுகள்

April 18, 2011

நீ மட்டும்தான் உறங்கிப்போயிருக்கிறாய்,
எப்போதும் போல
உன் அழகுக்கும்
எனக்கும்
விடியா இரவுதான்

April 09, 2011

பத்து வார்த்தைகள் கொண்ட
காதல் கடிதம் உனக்காக எழுத,
இதுவரை ஆயிரம் காகிதங்களை
கசக்கிப்போட்டு விட்டேன்.
இந்த பத்தும் ஆயிரமும்,
உன்னுடைய 'ஒற்றை' சொல்லுக்காகத்தான்

April 04, 2011

புவி ஈர்ப்பு விசைக்கும்
காதல் ஈர்ப்பு விசைக்குமான போட்டியில்
காதல் ஈர்ப்பு விசைதான் வென்றது,
இன்னும் பறக்கிறேன் வானத்தில், உன்னுடைய காதலினால்
வானவில் கருப்பு-வெள்ளை
நிறக்கலவயாய்ப் போனது,
மின்னல் கீற்றுக்களில்
வர்ணஜாலங்கள் தெரிகின்றன.
என்னடி மாயம் செய்து போனாயடி
என்னைக்கடந்து போகையில்?
உன்னுடைய இந்த புகைப்படத்தை
ஒவ்வொரு முறை பார்க்கும்போதும்
நீ புதிதாகவும் இன்னும் அழகாகவும் தெரிகிறாய்,
உன்னுடைய இன்னொரு புகைப்படத்தை
இப்போதைக்கு திருடவேண்டிய அவசியம் இல்லை